கடம்ப மரம்

 கடம்ப மரம் (Anthocephalus indicus, Anthocephalus Cadamba) முருகனுக்கும்,  திருமாலுக்கும் உரியது. இதன் மலர்கள் வெள்ளை நிறத்தில் கொத்தாக உருண்டு பூக்கும்.  நீரோட்டமுள்ள கரைகளில் இது செழித்து வளரும். சாமியாடும் வேலன் மட்டும் இதனை அணிந்துகொள்வான்.

இதன் இலைகளை மாலையாகக் கட்டி முருகனுக்கு அணிவிப்பர். 
இதன் பூ நாம் விளையாடும் பேட்மிட்டன் பந்துபோல இருக்கும்.
"கார்கோள் முகந்த கமம்சூழ் மாமழை
வாள்போல் விசும்பின் வல்லுறைச் சிதறி
உருள்பூந் தண்தார் புரளும் மார்பினன்"
என நக்கீரனார் திருமுருகாற்றுப்படையில் முருகனின் மார்பில் கடம்பப்பூ புரளௌகிறது என வர்ணிக்கிறார்.

Comments

Popular posts from this blog

தோடர்களின் எருமைகள்

தோடர்களின் வில்

மாவளியோ...மாவளி....