Posts

Showing posts from December, 2023

திருச்சியில் நீர்நாய்கள்... (The Smooth Indian Otter)

Image
           சனிக்கிழமை இரவு நண்பர் சிவாவிடமிருந்து அழைப்பு வந்தது. ‘சார் நாளக்கி பேர்ட் வாட்சிங் போலாமா?' என்றுக் கேட்டவரிடம் சரியென உடனே ஒப்புக்கொண்டதற்கு வேறொரு காரணமும் இருந்தது, பறவைகளைப் படம்பிடிப்பதற்காக NICKON P900 கேமரா அன்றுதான் வாங்கியிருந்தேன். கேமராவுடன் பறவைகள் கையேடு, பைனாகுலர், குறிப்பேடுகளுடன் மறுநாள் காலை 5.30 மணிக்குக் கிளம்பிவிட்டேன். சிவாவுடன் நண்பர் இராஜகோபாலும் வந்திருந்தார், அவர் புகைப்படக்கலைஞர் எனவே நமக்கு புகைப்படமெடுப்பதற்குக் கற்றுக்கொடுப்பதாக உறுதியளித்திருந்தார். மூவரும் திருச்சி ஆட்சியாளர் அலுவலகத்திற்கு பின்புறமுள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலின் வழியே பயணம் செய்து பறவைகளைப் படமெடுத்துக் கொண்டிருந்தோம். புறவைகளை கூண்டில் பார்க்காமல் அதன் இயற்கைச் சூழலிலேயே பார்ப்பது மகிழ்வானது. மயில், புறா, செம்போத்து, புல்புல், ஆள்காட்டி, தேன்சிட்டு, கானாங்கோழி, பனங்காடை, மீன்கொத்தி, குயில், முதலிய பறவைகளை அங்குப் பார்க்க முடிந்தது. கால்வாயின் மேலேயுள்ள பாலத்தில் நடந்துகொண்டிருந்தபோது… “ஆட்டர், ஆட்டர்” என்று இராஜகோபால் சார் கத்த… எங்களுக்கு ஒன்றும் ப

வான் புகழ வான்கா

Image
வரலாறு புகழும் வான்கா (தற்போது பல கோடி பெறுமதியான இவரின் ஓவியங்களுக்காக அன்று பெயின்டும் பிறசும் கூட வாங்க இயலாமல் இருந்தவர் தான்) இவர் தனது வாழ்நாளில் விற்பனை செய்த ஒவியம் ஒன்றே ஒன்றுதான் வன்கா சென்ற நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்து மறைந்த இணையில்லாத கலைஞன் இவரின் ஓவியங்களுக்கு இன்று விலை மதிப்பிடுவது சிரமமான காரியம் இருந்தாலும் உலகின் மிகப்பொரிய பணக்காரர்களும் புராதன ஓவியங்களைச் சேகரிப்பவர்களும் இவர் பூர்த்தி செய்யாமல் விட்ட ஓவியங்களுக்குக்கூட பல கோடி ரூபாய் தரப் போட்டி போடுகிறார்கள் ‘ ,Wjpapy; kpQ;RtJ tUlq;fspd; vz;zpf;if my;y> mjpy; tho;e;j tho;f;if kl;LNk !’                 thd;fhtpd;  kdk; kpFe;j gjw;wj;jp;y; ,Ue;jJ. Nur;ry; mtUf;Fs; xU thh;j;ija mehahrkhf tPrptpl;lhs;. thh;j;ijah mJ? ,y;iy> mtd; tho;f;ifiaNa ,Wjp KbTf;Ff; nfhz;Lte;Jtpl;l ngUk; Gay; mJ!       “ md;Ng> ePjhd; vj;jid mofha; ,Uf;fpwha;! ”       rhjhuz thh;j;ijfs;jhd;. MdhYk;> ,;j;jid ehshf Vd; me;j thh;j;ifs; jd;id Nehf;fp tuNt ,;y;iy. igj;jpaf;fhud;> rptg;Gj; jiyad; vd;w gl;l

யானையின் தமிழ் பெயர்கள்

யானையை குறிக்க ஏராளமான தமிழ் பெயர்கள்,,,,,, வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனை பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன்! யானையின் ஏனைய தமிழ்ப்பெயர்கள்: இவை சங்க இலக்கியங்களிலும், பாடல்களிலும் பல்வேறு இடங்களில் கையாளப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மனிதர்களை போலவே யானைகளுக்கும் இளமை கால பெயர்கள் உண்டு.. (1) கயந்தலை – பிறந்த உடனான யானையின் பெயர் (2) போதகம் – எழுந்து நிற்க தொடங்கும் பருவம் (3) துடியடி – ஓடி ஆடி விளையாடும் பருவம் (4) களபம் – உணவு தேடி செல்லும் பயிற்சி பெரும் பருவம் (5) கயமுனி – மற்ற இளம் யானைகளுக்கு பயற்சி அளிக்கும் பருவம் பொதுவான பெண் யானையின் பெயர்கள்: பிடி, அதவை, வடவை, கரிணி, அத்தினி நிறங்களை கொண்டு யானையின் பெயர்கள்: (1) கரிய நிறம்: யானை/ஏனை (2) வெள்ளை நிறம்: வேழம் யானையின் மற்ற காரண பெயர்கள்: (1) உம்பல் – உயர்ந்தது (2) கறையடி – உரல் போன்ற பாத

எண்களைக் கண்டறிந்தவர்கள் யார்?

Image
                   கணிதத்திற்கு அடிப்படை எண்கள்(NUMBERS) இந்த எண்களைக் கண்டறிந்தவர்கள் யார்? இக்கேள்விக்கு பதில்காண்பதற்கு நாம் 2500 ஆண்டுகளுக்கு பின்னோக்கிச் செல்லவேண்டும். கணித வரலாற்றை வரலாற்றுக் காலத்துக்கு முன், வரலாற்றுக் காலம், நவீன காலம் என்று மூன்று கட்டங்களாக பிரிக்கலாம். இதில் கிரேக்க கணித அறிஞர் தேல்ஸ்(THALES OF MILITUS - 550 B.C ) அவர்களிலிருந்து கணிதத்தின் வரலாற்றுக் காலம் ஆரம்பிக்கிறது.  அவருக்குப் பின் வந்த பிதாகரஸ்(PYTHOGORUS), யூக்லிட்(EUCLID), அப்போலினியஸ்(APPOLINIUS) முதலியவர்களின் பங்களிப்பால் கணிதம் வளர்ச்சியடைந்தது. அப்போது வடிவியல்(GEOMETRY), திரிகோணமிதி(TRIGONOMETRY) முதலிய கணிதக்கூறுகள் சிறப்பிடம் பெற்றன. நாம் இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கும் நவீன எண்முறையினங்கள் (MODERN NUMBER SYSTEM) அன்று அவர்களிடம் இல்லையாதலால், கணிதவளர்ச்சியில் தொய்வு ஏற்ப்பட்டது. அக்காலத்தில் அலெக்சான்டிரியா கணிதத்தின் தலைநராக விளங்கியது. ஹிப்பாசியா என்ற பெண் கணித அறிஞர் கொலை செய்யப்பட்டதிலிருந்து அலெக்சான்டிரியா அதன் பொலிவை இழந்தது. கணிதத்தை அடுத்த நிலைக்குக் கொண்டுசேர

மேற்கு தொடர்ச்சி மலையை அறிவோம்

Image
மேற்கு தொடர்ச்சி மலை     தழிழ்நாட்டில் கண்யாகுமரி மாவட்டத்தில் ஆரம்பித்து கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் வரை  சங்கிலித்தொடர் போல் 1600 கி.மீ. தொலைவு வரை பரவிக் கிடக்கும் மேற்கு தொடர்ச்சி மலையானது தென்னிந்தியாவுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது.  இந்த மலைத்தொடர், அரபிக்கடலில் இருந்துவரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து தென்மாநிலங்களுக்கு நல்ல மழையைத் தருகிறது, வெப்ப காலத்தில் அதிகம் வெப்பம் தாக்காதவாறும், குளிர்காலத்தில் அதிக குளிர் தாக்காதவாறும் தென்னிந்தியாவின் பருவகால நிலையை பாதுகாக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையானது இமயமலையைவிட பழமையானது. உலகின் வன வளங்கள் மிகுந்த 32 இடங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவின் 50 அணைக்கட்டுகள், 126  ஆறுகள், 29 நீர்வீழ்ச்சிகள், கொடைக்கானல், ஊட்டி, நீலகிரி, மூணாறு உள்ளிட்ட சர்வதேச கோடைவாழிடங்கள், பழநி முருகன் கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளிட்ட  புகழ்பெற்ற கோயில்கள் , ஆண்டு முழுவதும்  மழைப்பொழிவைக் கொடுக்கும் முள்புதர் காடுகள், புல்வெளிப் பிரதேசங்கள், சோலைக்காடுகள், பசுமைமாறா காடுகள் உள்ளிட்ட இயற்கை அன்னையின் அனைத்து அதிசயங்களையும் பெற்றுள