Posts

மேற்கு தொடர்ச்சி மலையை அறிவோம்

Image
மேற்கு தொடர்ச்சி மலை     தழிழ்நாட்டில் கண்யாகுமரி மாவட்டத்தில் ஆரம்பித்து கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் வரை  சங்கிலித்தொடர் போல் 1600 கி.மீ. தொலைவு வரை பரவிக் கிடக்கும் மேற்கு தொடர்ச்சி மலையானது தென்னிந்தியாவுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது.  இந்த மலைத்தொடர், அரபிக்கடலில் இருந்துவரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து தென்மாநிலங்களுக்கு நல்ல மழையைத் தருகிறது, வெப்ப காலத்தில் அதிகம் வெப்பம் தாக்காதவாறும், குளிர்காலத்தில் அதிக குளிர் தாக்காதவாறும் தென்னிந்தியாவின் பருவகால நிலையை பாதுகாக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையானது இமயமலையைவிட பழமையானது. உலகின் வன வளங்கள் மிகுந்த 32 இடங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவின் 50 அணைக்கட்டுகள், 126  ஆறுகள், 29 நீர்வீழ்ச்சிகள், கொடைக்கானல், ஊட்டி, நீலகிரி, மூணாறு உள்ளிட்ட சர்வதேச கோடைவாழிடங்கள், பழநி முருகன் கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளிட்ட  புகழ்பெற்ற கோயில்கள் , ஆண்டு முழுவதும்  மழைப்பொழிவைக் கொடுக்கும் முள்புதர் காடுகள், புல்வெளிப் பிரதேசங்கள், சோலைக்காடுகள், பசுமைமாறா காடுகள் உள்ளிட்ட இயற்கை அன்னைய...

வள்ளலார்

Image
வள்ளலார்  என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார்   அக்டோபர் 5 , 1823   இம் ஆண்டு  சிதம்பரம்  அருகில் உள்ள மருதூர் எனும் கிராமத்தில் பிறந்தார். இவர் இறக்கவில்லை என்று நம்பப்படுகிறது. இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர்.  "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு  பொன்னேரி   சென்று வாழ்ந்தார். பின்னர்  சென்னையில் ஏழுகிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார். பெருமான் வடலூரில் சத்திய ஞான சபையை அமைத்தார். 1871 ஆம் ஆண்டு சபையை கட்ட ஆரம்பித்தனர். 25.1.1872, தை மாதம் 13 வியாழக்கிழமை பூச நாளில் முதன் முதலாகச் சபையில் வழிபாடு தொடங்கப்பட்டது. அனைவரும் அருட்பெருஞ்சோதி தரிசனத்தை கண்டு களித்தனர். தமிழ் நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் .சிதம்பரத்திற்கு வடமேற்கே இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருதூர் என்னும் கிராமத்தில், கிராமக் கணக்கராக இருந்தவர் இராமய்யா என்பவர் .அவரு...

"ஸ்டோரி ஆப் பை"

Image
பள்ளிக்கூட கணிதத்தில் வட்டத்தின் பரப்பு πr^2 வட்டத்தின் சுற்றளவு 2πr என்று படிக்கும்போது, இந்த π என்றால் என்ன என்ற கேள்வி நம் எல்லோருக்கும் எழும். அப்போதெல்லாம் ஆசிரியர்கள் அது22/7அல்லது3.1415...என்று சொல்லி சமாளித்து விடுவார்கள். சரி,உண்மையில்πஎன்றால் என்ன? அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் நாம்2500ஆண்டுகள் பின்னோக்கி கிரேக்கத்திற்கு செல்ல வேண்டும். என்ன...போவோமா...? கிரேக்கத்தில் பிதாகரஸ் தனது'பிதாகரஸ் தேற்றத்தை'நிறுவியிருந்த காலகட்டம் அது... இந்த பிரபஞ்சமே எண்களால் ஆனது என்று பிதாகரஸ்வாதிகள் (பிதாகரஸை பின்பற்றுபவர்கள்) நம்பினர். எண்கள் கச்சிதமானவை என்று அவற்றை முழுவதும் நம்பியிருந்த அவர்கள்,தங்களாலேயே மறுக்கப்பட்டு தூக்கியெறியப்படும் ஒரு எண்ணைப்பற்றி யோசித்திருக்கவேமாட்டார்கள்.ஆம் ,அவர்களை அறியாமலேயே அப்படி ஒரு எண்ணை அவர்கள் அடைந்து விட்டிருந்தனர். முழுமையற்ற விகிதமுறா எண்களே (Irrational Numbers)அவை. என்ன செய்தாலும் முழுமையான எண்களாக (Whole Numbers) மாற அவை மறுத்தன. உதாரணமாக√2என்பதன் தசமப் பின்ன சுருக்கம்1.41421.....என்று முடிவுறா தசம பின்னமாக மு...

எவாரிஸ்ட் கலாய்ஸ்

Image
நண்பர்களே அக்டோபர் 25  பிரான்ஸ் நாட்டில் பிறந்த சபிக்கப்பட்ட கணிதயியலாளர் ஒருவரைப்பற்றித்தான் எழுதப்போகிறேன். சபிக்கப்பட்ட என்ற வார்த்தையை மீண்டும் ஒருமுறை சரிபார்த்தீர்கள்தானே?  ஆமாம்!  பரிதாபத்திற்குரிய அந்த ஜீவன் இன்றைய நவீன கணிதத்தின் நாயகன் தான் இறக்கப்போகும் நாளைக்கு முதல்நாள் இரவில் ஒரே மூச்சில் எழுதி முடித்ததைத்தான் இன்று நாம் GROUP THEORY என்று படிக்கிறோம்.  கணினி செயல்பாடுகளுக்கு அடிப்படையாக அமையும் இந்த குலங்களை(GROUP ANALYSIS) பயண்டுத்தியே ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒளி மடிதலை விளக்க முடிந்தது என்றால் பாருங்களேன். இத்தனைக்கும் இந்த சாதனையை ஒரு சிறையின் இருண்ட சுவர்களுக்கிடையே அவகாசம் இல்லாமல் ஒரே இரவில் எட்டியிருந்போது அவருக்கு வயது இருபது. அடுத்த நாள் நடந்த சண்டையில் முகம் தெரியாத ஒரு பெண்ணிற்காக குதிரையின் மேலேயே கொல்லப்பட்ட 20 வயதே நிரம்பிய ஒருவரை எப்படிக் குறிப்பிடுவது? பரிதாபத்திற்குறிய ஜீவன் என்றா? சபிக்கப்பட்டவர் என்றா? கதையை ஆரம்பிப்போமா? அவர் பெயரையே நான் இன்னும் குறிப்பிடவில்லையே. எவரிஸ்ட் காலாய்ஸ் (Evariste Galois) அக்டோபர...

ஆசிரியர்தின வாழ்த்துகள்

  அனைவருக்கும் ஆசிரியர்தின வாழ்த்துகள் நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி திரு. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்ததினமான செப்டம்பர் 5 ஆம் தேதியை "ஆசிரியர் தினமாக' கொண்டாடுகிறோம் ..! மாதா, பிதா குரு, தெய்வம் என்று வரிசைப்படுத்துவார்கள். தெய்வத்துக்கு முன்பாக ஆசிரியர்களை நினைத்து வணங்குவதே நமது பண்பாடு. நம்நாட்டுக் கலாசாரத்தில் பெரிய ஆளுமைகளாக இருந்த பலரும் ஆசிரியர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆசிரியர்களுடைய பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது. ஏனெனில், ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்துவது, விலங்குகளிடமில்லாத சிறப்புக்கூறுதான். இக்கூறு சிறந்த கல்வியின் மூலமே கிடைக்கிறது. அந்த சிறந்தக் கல்வியை அளிக்கும் மாபெரும் பணி ஆசிரியர்களைச் சார்ந்துள்ளது. ஏனெனில், ஆசிரியர்கள் உருவாக்கும் மாணவர் சமூகமானது, ஒரு நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்ல, இந்த உலகின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது. மற்ற பணிகளைப் போல ஆசிரியர் பணி என்பது ஒருவரின் வாழ்வாதாரத்திற்கான பணி அல்ல. தனது வாழ்வையே ஆதாரமாக்கும் பணி. இத்தினத்தில் ஆசிரியர்களின் சிறப்பை வெளிப்படுத்தும் ஒரு கடிதத்தை பகிர்வதுப்...