Posts

தோடர்களின் எருமைகள்

Image
  தோடர்களின் எருமைகள் தோடர்கள் எருமைகளை இறைவனுக்கு சமமாக கருதுகின்றனர். அவர்களின் கோயில்களில் எருமையின் கொம்பு அல்லது எருமையின் தலை வடிவம் இடம்பெற்றிருக்கும். இவர ்களின் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் எருமைகள் பங்குபெறுகின்றன. தோடர் இனப்பெண் வாசமல்லி அவர்கள் கூறுகிறார்: "எங்கள் சமூகத்தில் பிறப்பிலிருந்து இறப்பு வரை எருமை மாடுகள் கூடவே வரும். பெண்களுக்கு எருமைகளை சீதனமாக கொடுப்போம். குழந்தைப் பிறந்தால் அந்தக் குழந்தைக்கும் தாய்மாமனுக்கும் மாடு கொடுப்போம். எருமை நெய் இல்லாமல் கோயில்களில் விளக்கு ஏற்ற மாட்டோம். நாங்கள் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணமே தோடா எருமைகள்தான். மூலிகைச் செடிகளைத் தின்று வளர்வதால் அவை தரும் பாலைக் குடிக்கும் எங்களை நோய்கள் அண்டுவதில்லை. எங்கள் சமூகத்தில் யாராவது இறந்துவிட்டால் அவருக்கு நெருக்கமானவர்கள் தங்களது வீட்டில் உள்ள எருமைகளில் ஒன்றை மேற்கு திசை நோக்கி துரத்தி விடுவர். அது இயற்கையாக மரணமடைந்து, இறந்தவர்களுக்கு இன்னொரு உலகத்திலும் பால் கொடுக்கும் என்பது எங்கள் முன்னோர்களின் நம்பிக்கை. காலப்போக்கில், மாடுகளை மேற்கு திசை நோ

உன்னம் - முன்னம் - முன்னை

Image
  வெள்ளிமலை வில்லியாரைப் பார்க்கப் போயிருந்தபோது வில்லியாரின் நடுகல்லை அவ்வூரின் இடும்பர் கோயிலில் பார்த்தோம். இரண்டு நடுகற்கள் கோயிலில ் எதிரேயுள்ள மரத்தடியில் இருந்தன. அம்மரத்தையும் இச்சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையையும் பார்த்து வியந்து போனோம். தொல்காப்பியரும், சங்கப்புலவர்களும் விவரித்தக் காட்சி நமது கண்முன்னே விரிந்திருந்தால் வியப்பு ஏற்படாமல் இருக்குமா? சற்று விரிவாகப் பார்ப்போமா…. தற்போது நாட்டுமக்களால் 'முன்னை' என வழங்கப்படும் இம்மரம் இலக்கியங்களில் 'உன்னம்' எனக் குறிக்கப்பட்டிருக்கிறது. உன்னம் என்பது சிறிய இலைகளுடன் பொன்போன்றப் பூவையும் கொண்ட ஒரு மரம் அகும். பண்டைத்தமிழ் மறவர் போருக்குச் செல்வதற்கு முன்பாக 'நிமித்தம்' பார்ப்பர். நிமித்தம் பார்த்தாலென்பது தற்போதைய வழக்கில் 'சகுனம்' பார்த்தலாகும். போருக்குத் தயாரான வீரர்கள் ஏதேனும் நற்செய்திகள் காதில் விழுந்தாலோ, நல்ல சகுனங்கள் தென்பட்டாலோ போரில் வெற்றிக்கிட்டும் என நம்புவர். இத்தகைய நிமித்தம் பார்த்தலில் ஒன்றுதான் இந்த உன்னம் பார்த்தல். போருக்குச் செல்வதற்கு முன் முன்னை மரத்திற்கு முன்பாக நின்ற

தோடர்களின் வில்

Image
  பழங்குடி மக்களான தோடர்களின் மந்துக்குச் சென்றிருந்தபோது அவர்களின் வில்லைப்பற்றி கேட்டறிந்தோம். அவர்கள் பயன்படுத்தும் வில்லை ஒரு குறிப்பிட்ட மரத்திலிருந்துதான் செய்வார்களாம். இம்மரத்தை 'வில்லுமரம்' என்றே அழைக்கின்றனர். தற்போது வேட்டை தடைச் செய்யப்பட்டிருப்பதால் பாரம்பரியத்திற்காக மட்டும் செய்து வைத்துக்கொள்கிறார்களாம். பழங்காலத்திலிருந்தே வில் ஒரு முக்கிய ஆயுதமாக வேட்டையிலும், போர்களத்திலும் இருந்துள்ளது. மேல்பழைய கற்காலத்திற்கும் இடை கற்காலத்திற்கும் இடையில்தான் வில்லும் அம்பும் தோன்றியுள்ளன. வில், அம்பை எய்வதற்குப் பயன்படுகிறது. துப்பாக்கிககளின் வரவிற்கு முன்புவரை அவ்விடத்தை வில் பிடித்திருந்தது. இவை மரத்திலிருந்து செய்யப்பட்டன. நவீன வில்கள் பல்லடுக்கு மரம், கண்ணாடி இழை, உலோகங்கள், கரிம நார் போன்ற மூலபொருட்களால் ஆக்கபடுகின்றன. முழுவதுமாக ஒரே மரத்தைக் கொண்டு தயாரித்த வில் 'ஒருமரவில்' எனப்படுகிறது. - பாலா பாரதி

இலகுலீசர் - தேவர்மலை

Image
  குஜராத்தில் காயாவரோகணம் எனுமிடத்தில் பிறந்த இலகுலீசர் சைவசமயத்தின் ஒருபிரிவான இலகுலீச பாசுபதத்தைத் தோற்றுவித்தவர். இவர் சிவபெருமானின் இருபத்தெட்டாவது அவதாரமாகக் கருதப்படுகிறார். இவரது சிற்பங்கள் வடஇந்தியாவில் குறிப்பாக ஒரிசாவில் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் கர்நாடகத்திலும், ஆந்திரத்திலும் அடையாளம் காணப்பட்ட இலகுலீசர் சிற்பங்கள் தமிழ்நாட்டில்  விழுப்புரம், திருவண்ணாமலை, பேரூர், அரிட்டாப்பட்டி, தேவர்மலை முதலிய இடங்களில் உள்ளதாகக் கூறப்படுகிறது.         இவற்றை ஆய்வுசெய்துவரும்  திரு.வீரராகவன், திரு.சுகவன முருகன் ஆகியோருடன் திருமதி.மங்கை வீரராகவன், முனைவர்.தமிழகன், திரு.வீரசேகரன் ஆகியோருடனும் தேவர்மலைக்குப் பயணமானோம். சென்றமுறை இங்குச் சென்றபோது கோயில் பூட்டியிருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்ப நேர்ந்தது. ஆனால், இம்முறை நம்மை திரு.கரு.இராஜேந்திரன் அவர்கள் தகுந்த முன்னேற்பாடுகளுடன் அழைத்துச் சென்றார்.                          புதுக்கோட்டையிலிருந்து நமணசமுத்திரம் வழியாக பேரையூர் செல்லும் சாலையில் பேரையூர் விலக்கிலிருந்து மேற்காகச் செல்லும் சாலையில் இரண்டு கிலோமீட்டர்கள் தொலை

சுமைதாங்கிக்கல்

Image
  " சுமைதாங்கி சாய்ந்தால்... சுமை என்ன ஆகும்... மணி தீபம் ஓய்ந்தால்... ஒளி எங்கு போகும்... " காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கைக் காண கல்லணை சாலையில் சென்றிருந்தோம் உத்தமர்சீலியில் தரைப்பாலத்தில் தண்ணீர் சென்றுகொண்டிருந்தது. காவிரியிலிருந்து தரைப்பாலம் வழியாக கொள்ளிடத்திற்கு, அங்கிருந்த வாழைத்தோப்புகளை மூழ்கடித்தபடி சென்றுகொண்டிருந்ததை மக்கள் கவலையுடன் பார்த்துக்கொண்டிருக்க நாமும் அதற்குமேல் செல்ல முடியாததால் திரும்ப முனைந்தபோதுதான் அதைக் கவனித்தோம். சாலையோரமாக இருந்த அந்த சுமைதாங்கிக்கல் நம்மை ஈர்க்கக் காரணம் அது வண்ணம் பூசப்பட்டு பெயிண்டால் எழுதப்பட்டிருந்ததுதான். உத்தமர்சீலியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரின் மனைவி லீலாவதி என்பவருக்காக ஏற்படுத்தப்பட்டது என்ற செய்தியைத் தாங்கியபடி நின்று கொண்டிருக்கிறது இக்கல். பிற்காலத்தில் தோன்றியிருந்தாலும், அண்மைக் காலங்களில் அருகிவரும் இப்பண்பாட்டின் கடைசி எச்சங்களைப் பார்க்கும்போது மனசு சற்றே கனக்கிறது. அங்குள்ளவர்களிடம் கேட்டபோது லீலாவதி அவர்களின் மகன் இராஜரத்தினம் இக்கல்லை பராமரிப்பது தெரிந்தது. அவரையும் அவர் மனைவியையும் அவர்கள் வ

ஜோட்டா- ஜோட்டி | JOTA - JOTI

Image
   உலகின் மிகப்பெரிய சாரணர், சாரணியர் (Scouts and Guides) நிகழ்வான ஜோட்டா-      ஜோட்டி (JOTA-JOTI) இந்நிகழ்வு உலகம் முழுவதும் ஒரே நாளில் நடைபெறுகிறது.      இதில் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். JOTA என்றால் என்ன? JAMBOREE ON THE AIR - JOTA என அழைக்கப்படும். இது ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒர் அனைத்து நாடுகள் நிகழ்சியாகும். JOTI என்றால் என்ன? JAMBOREE ON THE INTERNET - JOTI இணையத்தில் நடைபெறும் நிகழ்வாகும். இது உலகெங்கிலும் உள்ள சாரணர், சாரணியர்களுக்காக (Scouts and Guides) நடத்தப்படும் ஒரு கல்வி சார்ந்த நிகழ்வாகும். தகவல் தொடர்பு, தொழில்நுட்பம், உலகளாவிய குடியுரிமையின் மதிப்புகள் பற்றி இளைஞர்கள் அறிந்து கொள்ளவதற்காக World Organization of the Scout Movement (WOSM) என்ற உலக நாடுகள் அமைப்பால் நடத்தப்படுகிறது. இந்நிகழ்வில் உலகம் முழுவதிலும் உள்ள சாரணர், சாரணியர்கள் ஒருங்கினைவார்கள். அமெச்சூர் வானொலி (Ameteur Radio - HAM) மூலம் சாரணர்கள் தொடர்புகொள்ளும் முறையையும் கற்பார்கள். நான் எப்படி ஒரு சாரணராகப் பங்கேற்க முடியும்? உங்கள் உள்ளூர் சாரணர் சபையைத் தொடர்பு

மாவளியோ...மாவளி....

Image
   கார்த்திகை திருநாள் வாழ்த்துகள் ... 'மாவளி’ சுற்றுதல் கார்த்திகைத் தீபநாளில் நடைத்தப்படும் விளையாட்டாகும். பனம்பூவைக் கருக்கித் தூளாக்கி பொட்டலமாகக் துணியில் கட்டி வைத்துக்கொள்வார்கள். இப்பொட்டலத்தை பனைஓலை மட்டைகளின் நடுவே வைத்துக் கட்டிவிடுவார்கள். இதை நீண்ட கயிற்றில் கட்டிவைத்துக்கொண்டு நெருப்பை வைத்து விடுவார்கள். இப்போது கயிற்றைப் பிடித்து வேகமாக சுற்றுவார்கள். அது தீப்பொறிகளைச் சிதறவிட்டு சுற்றுவதற்குத் தகுந்தவாறு பல உருவங்களை ஏற்படுத்தும்.(படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது) அப்போது "மாவளியோ மாவளி" என்று சத்தமிடுவார்கள். இது பார்ப்பதற்கு ஒரு இனிய காட்சியாக இருக்கும். மா ஒளி = பெரிய ஒளி என்பது மருவி மாவளி ஆகியிருக்க வேண்டும். அண்மையில் வெளிவந்த 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' திரைப்படத்தில் கதாநாயகன் தினேஷ் மாவளிச் சுற்றிக்கொண்டு "மாவளியோ...மாவளி...." எப்பாடும் பாடல் இடம்பெற்றுள்ளது. இவ்வழக்கம் நீண்டகாலமாக வழக்கில் இருப்பதை, இக்காட்சி பாறைஓவியத்தில் காணப்படுவதிலிருந்து அறிந்துகொள்ளலாம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஐகுந்தம் பாறைஓவியத்தில் மாவளி